World Cup : தென்கொரியாவில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கங்களை குவித்தது.
உலகக்கோப்பை
தென் கொரியாவின் குவாங்ஜு நகரில் உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த உலக கோப்பை வில்வித்தை போட்டியில் தொடரில் ஆடவருக்கான காம்பவுண்ட் பிரிவு இறுதி சுற்றில் இந்தியா Vs பிரான்ஸ் இடையே போட்டி நடைபெற்றது
இந்த போட்டியில் இந்திய அணியை சேர்ந்த அபிஷேக் வர்மா, அமன் சைனி, ரஜத் சவுகான் ஆகியோர், பிரான்ஸ் அணியில் அட்ரியன் கோன்டியர், ஜீன் பிலிப்போல்ச், கென்டின் பரேர் ஆகியோரை எதிர்த்து வெளையாடியது. இந்த மோதலில் இந்திய அணி 232-230 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது.
மேலும் படிக்க:- ISSK Junior World cup Suhl 2022: பதங்களைத் தட்டி தூக்கிய இந்திய வீரர்கள்.! உற்சாகத்தில் திளைக்கும் பாரதம்....!
வில்வித்தை போட்டி
தென்கொரியாவில் நடந்து வரும் உலகக்கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியா இதுவரை 5 பதக்கங்கள் வென்றுள்ளது. வில்வித்தை காம்பவுண்ட் ஆடவர் அணி பிரிவில் இந்திய குழு தங்கம் வென்று அசத்தியுள்ளது.
33 பதக்கம்
தென் கொரியாவின் சுகல் நகரில் நடந்து முடிந்த ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா 33 பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. அதில், 13 தங்கம், 15 வெள்ளி மற்றும் 5 வெண்கல பாதக்கங்களை இந்திய வீரர் வீராங்கனைகள் வென்றுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…