திருச்சி: நாம் சிறை பறவைகள் என்றும் சீமானை யாரும் சிறைக்கு அனுப்ப முடியாது என்று நாம் தமிழர் கட்சி ஒருகிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சீமான் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், என்மீது 176வழக்குகள் உள்ளது. சிறைச்சாலையே நமக்காக தான் உள்ளது. நாம் சிறை பறவைகள். என்னை யாரும் சிறைக்கு அனுப்ப முடியாது. போனால் எல்லோரும் போகலாம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், செப்டம்பரில் உரிமை தொகை கொடுப்பதற்கு இப்போதே விளம்பரம் செய்கிறார்கள். ஏன் இந்த விளம்பரம்? அதற்கு கோடிக் கணக்கில் செலவு செய்யப்படுகிறது. நாம் அடிமை இனம். ரூ.650கோடியை நாள்தோறும் குடிப்பதற்காக செலவு செய்கிறோம். ஆகையால் நமக்கு எதற்கு இலவசம். சாலையோரம் ரேஷன் கடை மற்றும் டாஸ்மாக் உள்ளது. அங்கே வாங்கி இங்கே கொடுப்பதற்கு எதற்கு இலவசம் என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…