அந்தமான் தீவுகளில் தெற்கு மற்றும் நடு அந்தமான் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர்தான் ஜாரவா பழங்குடியினர். ஜாரவா என்றால் மண்ணின் மைந்தர்கள் என்று பொருள். அந்தமான் தீவுகளில் வசிப்பவர்களாக இருந்தாலும், இவர்களது மரபணுவை சோதித்தபோது இவர்கள் பசிபிக் பகுதிகளை செத்தவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மற்ற பழங்குடியினர்களிடமிருந்து சற்று வேறுபட்டே காணப்படுகின்றனர். அதாவது இந்த பழங்குடியின பெண்ணிற்கு வெள்ளை நிறத்தில் குழந்தை பிறந்தால் அந்த குழந்தையை உடனே மரணதண்டனை விதித்து கொலை செய்துவிடுவதுதான் இவர்களது பழக்கமாக உள்ளது.
நாம் வாழ்ந்துவரும் இந்த உலகில் இன்னும் பல்வேறு வகையான பழங்குடியினர் வாழ்ந்துவருகின்றனர். இவர்களின் பல இனங்கள் தற்போது உள்ள நவீன காலத்திற்கு ஏற்ப தங்களின் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டுள்ளனர். ஆனால் ஒரு சில பழங்குடியின இனங்கள் பழைய வாழ்க்கை முறையையே பின்பற்றி வருகின்றனர். அவர்களில் சுமார் 55ஆயிரம் ஆண்டுகளாக அந்தமான் தீவுகளில் வாழ்ந்துவரும் ஜாரவா பழங்குடியினர் தான் இந்த வித்தியாசமான முறையை பின்பற்றி வருகின்றனர்.
தற்போது இந்த பழங்குடியினம் அழிவில் விளிம்பில் உள்ளது. காரணம் இவர்களில் வெள்ளையாக பிறக்கும் குழந்தைகள் நம் இனத்தை சார்ந்தது இல்லை நம் இனம் என்றால் கருப்பாக இருப்பது மட்டுமே என கருதி அவர்களை கொலை செய்துவிடுவது தான். தொன்மையான பழங்குடிகளாக கருதப்படும் ஜாரவா பழங்குடியினத்தில் இப்போது மொத்தமாகவே வெறும் 380 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர். வெளி உலக தொடர்பு துளியும் இன்றி தனிமையில் வாழும் ஜாரவா பழங்குடியினர் விலங்குகளையும் அந்தமான் கடலில் மீன்களையும் வேட்டையாடி உண்டு வாழ்கின்றனர்.
அவர்களை பொறுத்தவரை, வெள்ளை நிறமான குழந்தை என்பது வேறு சில பழங்குடி அல்லது வேற்றுமையாக கருதுகிறார்கள். இதனால் தான் வெண்மை நிறத்திலான குழந்தையை கொன்று விடுகிறார்கள். இது தவிர, இந்தச் சமூகத்தில் ஒரு குழந்தை பிறக்கும் போதெல்லாம், குலப் பெண்கள் அனைவரும் தாய்ப்பால் கொடுப்பார்கள். இது ஒற்றுமையின் ஆணிவேராகக் கருதப்படுகிறது.
கருப்பு என்பது இவர்களில் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இவர்களுக்கு கருப்பாக குழந்தை பிறக்க வேண்டும் என்று விலங்குகளின் ரத்தத்தை கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்கின்றனர். இதனால் குழந்தைகள் கருமையாக பிறகும் என்பதே இவர்களின் மூடநம்பிக்கை. மேலும் கொடுமையின் உச்சமாக வெள்ளையாக பிறகும் குழந்தையை குழந்தையின் தந்தையே கொலை செய்துவிடுவது தான்.
அது போல் ஒரு பெண் கணவரை இழந்துவிட்டால் அவரது குழந்தையையும் கொல்லும் வழக்கம் இவர்கள் இனத்தில் உள்ளது. இவர்களை சுற்றுலா பயணிகள் நேரில் போய் பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அது போல் தங்களை புகைப்படம் எடுத்து வெளியிடுவதையும் இவர்கள விரும்ப மாட்டார்கள். அது சட்டவிரோதம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…