கள்ளக்குறிச்சியில் கலவரம் நடந்ததுக்கு திமுக அரசின் அலட்சியமே காரணம் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலம் என்ற பகுதியில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி திடீரென மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில், அவரது மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என மாணவியின் குடும்பத்தினர் உள்பட பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. மேலும், பள்ளி பேருந்து மற்றும் பள்ளி வளாகம் முழுவதும் அடித்து நொருக்கி தீ வைத்தனர்.
இதனையடுத்து, கள்ளகுறிச்சி சம்பவத்திற்கு முழுக்க முழுக்க காரணம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான அரசும் அவரது கீழ் இயங்கும் காவல்துறையின் தான் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் மாணவிகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என உளவுத்துறை செயலற்றுப் போய் உள்ளது என கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…