குஜராத் மாநிலம் ரந்தீக்பூரில் கடந்த 2002-ம் ஆண்டு பில்கிஸ் பானோ என்ற 5 மாத கர்ப்பிணியை 11 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. மேலும், அந்த கும்பல் பானோவின் உறவினர்கள் சிலரையும் கொலை செய்தது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு உச்சநீதிமன்றம் பில்கிஸ் பானோவிற்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க குஜராத் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் குற்றவாளிகளை குஜராத் அரசு மன்னித்து விடுதலை செய்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகையும், பாஜக செயற்குழு உறுப்பினருமான குஷ்பூ “பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தாக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் உயிருக்கு பயந்த நிலையில் இருக்கும் பெண்ணுக்கு நீதி கிடைத்தாக வேண்டும்.
பில்கிஸ் பானு மட்டுமல்ல, வேறு எந்த பெண்ணாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசியல் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும், குஜராத்தில் பாஜக அரசு எடுத்த முடிவை எதிர்த்து தமிழக பாஜக பிரமுகr குஷ்பூ பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…