பொதுவாக, ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு விதமான சடங்கு, சம்பிரதாயம் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும், ஒரு சில சடங்கு சம்பிரதாயங்கள் நம்மை ஆச்சரியபடுத்தும் விதமாகவும், இப்படி கூட இருக்கிறதா என்றும் சிந்திக்க வைக்கிறது. அப்படி தான் ஒரு நாட்டில் விநோதமான சடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
அதாவது பிரேசில் , வெனிசுலா போன்ற இடங்களில் வாழும் யனோமாமி (Yanomami) என்ற பழங்குடியின மக்கள் இறந்தவர்களை சூப் வைத்து குடிக்கும் விநோதமான சடங்கை பின்பற்றி வருகின்றனர். இவர்களில் ஒருவர் இறந்துவிட்டால் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்றால், அவரின் உடலை எரித்து அதை உயிருடன் இருக்கும் இறந்தவர்களின் உறவினர்கள் சாப்பிட வேண்டும் என்று நம்புகின்றனர்.
அதன்படி, இந்த சடங்கின் முதற்கட்டமாக இறந்தவர்களின் உறவினர்கள் அழுது, பாடல்கள் பாடி துக்கத்தை வெளிப்படுத்துகின்றனர். அதன்பிறகு, இறந்தவர்களின் முகங்களில் சிறிதளவு மண்ணை தேய்த்து பிணங்களை எரித்து, அந்த எரிந்த உடல்களின் மிச்சத்தை சேகரித்து, அதை வாழைப்படத்துடன் சேர்த்து சூப் போல சமைத்து உட்கொள்கின்றனர்.
இறந்தவர்களின் மரணம் இயற்கை மரணமாக இருந்தால் இந்த சூப்பை சாப்பிடுகின்றனர். ஒருவேளை இறந்தவர்கள் கொலை செய்யப்பட்டாலோ அல்லது தற்கொலை செய்து கொண்டாலோ, பெண்கள் மட்டும் தான் இந்த பிணங்களை சாப்பிட வேண்டும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…