காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு இருக்கிறார். தற்போது மராட்டியத்தில் அவரது நடைபயணம் நடந்துவரும் நிலையில், மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் ஒரு இனிப்பு கடை வாசலில், 'ராகுல்காந்தி வெடிகுண்டு வைத்து கொல்லப்படுவார்' என்று கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில், கடிதம் எழுதியவர் யார்? அதை கடை வாசலில் வீசி சென்றது எதற்காக? என்பது குறித்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். தற்போது, இதுகுறித்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இது புரளி என்றும் காவல்துறை ஒருபுறம் கூறிவருகிறது. விரைவில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் யாத்திரையை தொடங்க உள்ள நிலையில் இந்த மிரட்டல் கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், ராகுல் காந்தியின் தந்தையான ராஜீவ் காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். தற்போது இவருக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…