Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் - காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை!

Saraswathi Updated:
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் - காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை!Representative Image.

தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தமிழக டிஜிபியாக கடந்த 2 ஆண்டுகளாக பதவி வகித்துவந்த சைலேந்திரபாபு கடந்த மாதம் 30ம் தேதி ஓய்வுபெற்றார். அவரைத் தொடர்ந்து, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு புதிய டிஜிபியாக சங்கர்ஜுவால் பதவியேற்றார். இதேபோல், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி, மாநகர காவல்துறை ஆணையர், ஆவடி காவல் ஆணையர் ஆகியோரும் அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்டனர்.  

இந்த நிலையில், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், அரசு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா, உள்துறை செயலாளர் அமுதா, சட்டம்-ஒழுங்கு டிஜிபி சங்கர்ஜுவால், உளவுத்துறை ஐ.ஜி. செந்தில்வேலன்,  சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண், மாநகர காவல்துறை ஆணையர்கள், சரக ஐ.ஜி.கள், டிஐஜிகள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

சொத்து பிரச்சனை தொடர்பாக குற்றங்கள், குடும்ப வன்முறை, பெண்கள்-குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், காவல்துறையினரின் பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள் உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்