சத்தீஸ்கர் மாநிலத்தில் திருமணம் முடிந்து வரவேற்புக்கு தயாராகிக்கொண்டிருந்த புதுமண தம்பதிகள் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரின் சந்தோஷி நகர் பகுதியில் பிரிஜ் நகரில் வசித்து வந்தார் 24 வயதான அஸ்லம். இவர் கக்ஷன் பானு என்னும் பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் பெற்றோர்களால் கடந்த 19 ஆம் தேதி சாஸ்திரி பஜாரில் அமைந்துள்ள சீரத் மைதானத்தில் நடைபெற்றது.
வரவேற்பு விருந்திற்காக ஏற்பாடுகள் நடைபெற்றது. புதுமண தம்பதிகள் அஸ்லம் மற்றும் கக்ஷன் பானு இருவரும் அறையில் தயாராகிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் பயங்கரமான அலறல் சத்தம் கேட்டதால் பதறிப் போன உறவினர்கள் கதவை திறக்க முயன்றனர். ஆனால் கதவு உள்ளே தாப்பாள் போட்டதால் அவர்களால் திறக்க முடியவில்லை. பின்னர் ஜன்னல் பகுதியில் இருந்து பாக்கும் போது அஸ்லம் கீழே குப்பிற கிடந்தும், கக்ஷன் மெத்தையில் சடலமாக கிடந்ததையும் பார்த்து பதறி போயினர். அறை முழுவதும் ரத்த வெள்ளத்தால் சூழ்ந்து இருந்தது.
உடனே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை முடிவில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக தெரிவித்தனர். அவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சியில் இரு தரப்பினருக்கும் இடையே மொத்தம் ஏற்படாமல் தடுக்க அதிக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்தியாவில் தொடர்ந்து நடைபெறுகிறது திருமண தம்பதிகளின் கொலை. இதனால் மக்கள் மிகவும் பயத்துடன் இருக்கின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…