Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நிலையில்லாத ஆளுநரை தமிழகத்திற்கு தந்த ஒன்றிய அரசு வாழ்க: அமைச்சர் விமர்சனம்

Baskarans Updated:
நிலையில்லாத ஆளுநரை தமிழகத்திற்கு தந்த ஒன்றிய அரசு வாழ்க: அமைச்சர் விமர்சனம்Representative Image.

செங்கல்பட்டு: காலையில் ஒரு அறிவிப்பு மாலையில் ஒரு அறிவிப்பு என நிலையில்லாத ஆளுநரை தமிழகத்திற்கு தந்த ஒன்றிய அரசு வாழ்க, இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில்  புதிய பேருந்து நிலையம் அமைய விருக்கும் இடத்தை சேகர்பாபு மற்றும் சிறுகுரு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தாமோ அன்பரசன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் பின்னர் செய்தியாளர் சந்தித்த அமைச்சர் பேசுகையில் 6.79 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள இந்த பேருந்து நிலையம் ஆனது.

ஒரே சமயத்தில் 50 பேருந்துகள் நிறுத்தும் வகையில் அமைக்கப்பட உள்ளதாகவும் இதனால் மாமல்லபுரத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும் எனவும் எனவே பேருந்து நிலையம் அமைப்பதற்கான மேம்பாட்டு பணிகள் அனைத்தும் வரும் ஜூலை மாதத்தில் தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.  

சிதம்பரம் நடராஜ பெருமாள் கோவிலில் பெண்ணை அடித்த சம்பவம் தவறு என்று இந்து அறநிலையத்துறை கூறுகிறது இதை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எதிர்ப்பது தவறு தமிழ்நாடு ஆளுநர் காலையில் ஒரு அறிவிப்பு மாலையில் ஒரு அறிவிப்பு என நிலையில்லாத ஆளுநரை தமிழ்நாட்டிற்கு தந்த ஒன்றிய அரசு வாழ்க என நகைத்து பேசினார்.

 இந்த ஆய்வில் பெருநகர வளர்ச்சிக் குழும செயலாளர் அபூர்வா செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த் ராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்