Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இது என்ன உங்க கட்சி பிரச்சனையா?... இபிஎஸ், ஓபிஎஸை வறுத்தெடுத்த முத்தரசன்! 

KANIMOZHI Updated:
இது என்ன உங்க கட்சி பிரச்சனையா?... இபிஎஸ், ஓபிஎஸை வறுத்தெடுத்த முத்தரசன்! Representative Image.

கட்சியாக இரண்டாக பிரிவு பட்டிருந்தாலும், ஆளுநர் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கருத்து சொல்லியிருக்க வேண்டுமென முத்தரசன் தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாங்கள் ஆளுநர் உரைகளை மட்டுமே கேட்க வந்தோம் என பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருந்தார். அதிமுக இரண்டு பிரிவாக கூட இருக்கலாம் ஆனால் இதை கட்சி பிரச்சனையாக பார்க்க கூடாது. அதேபோல் இதற்கு பதிலாக வேறொரு பதிலை கொடுத்து திசை திருப்புவது ஏற்புடையதல்ல. அதேபோல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியாக இருந்தாலும் சரி முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வமாக இருந்தாலும் சரி ஆளுநரின் நடவடிக்கை கண்டனத்தை தெரிவித்து இருக்க வேண்டும்.

 

முதல்வர் இந்த கூட்டத்தில் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டார். முதலமைச்சர் உரையாற்றிக் கொண்டிருக்கும் பொழுது ஆளுநர் சட்டப்பிரிவிலிருந்து வெளியேறினார்.ஆனால் சட்டப்பேரவையின் அவையை பொறுத்தவரையில் தேசிய கீதம் முடிந்த பின்னால் தான் ஆளுநர் வெளியே செல்ல வேண்டும்.

 

குறிப்பாக ஆளுநர் ரவி வெளியே சென்ற செயல் தமிழ்நாடு முதலமைச்சர் அவமதிக்கவில்லை மாறாக அவர் தமிழ்நாட்டு மக்கள் மற்றும் தேசிய கீதத்தை அவமதித்துள்ளார். தேசிய கீதத்தை கூட அவமதிக்கக் கூடிய ஒரு ஆளுநராக தற்பொழுது தமிழகத்தில் உள்ள ஆளுநர் உள்ளார்.

 

பாரதி ஜனதாவை பொருத்தவரையில் மத்தியிலும் மாநிலத்திலும் தங்கள் மட்டுமே அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.அதன் காரணமாகவே பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களை ஆளுநர் மூலமாக சர்வ அதிகார பாசிச செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் காரணமாகவே பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களை ஆளுநர் மூலமாக சர்வ அதிகார பாசிச செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு சார்பில் தயாரித்து தயாரித்து தரக்கூடிய புத்தகத்தில் உள்ளது மட்டுமே படிக்க வேண்டியது அவருக்குள்ள சட்ட நெறிமுறை ஆனால் அவர் சட்ட அவமதிப்பில் ஈடுபட்டுள்ளார்.

 

குறிப்பாக சட்டத்திற்கு எதிராக அராஜகங்களில் ஆளுநர் ரவி ஈடுபட்டுள்ளார். இது அவர் தெரியாமல் ஒன்றும் செய்யவில்லை அவர் வேண்டும் என்றே தமிழ்நாட்டில் அரசியலில் குழப்பத்தை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்