தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஆகியதே பாஜக தான் என தமிழக சட்டமன்ற உறுப்பினரும் பாஜகவை சேர்ந்தவருமான நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் பொது செயலாளர் பதவியை நீக்கிவிட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை உருவாக்கி கடந்த 5 ஆண்டுகளாக ஓபிஎஸ்-ம் இபிஎஸ்-ம் பதவி வகித்துவருகின்றனர்.
இதனிடையே சமீபத்தில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுவில் கொண்டுவந்த தீர்மானத்தை பொதுக்குழுவே நிராகரித்த சம்பவம் அரங்கறியது. மேலும் உட்கட்சி பூசல் காரணமாக பல மாவட்டங்களில் கட்சித்தொண்டர்கள் மத்தியில் மோதல் போக்கு என்பது அரங்கேறும் சூழல்களும் உருவாகியுள்ளது.
இந்நிலையில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆகியதே பாஜகதான் என சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் வருகிற 2024 ம் தேர்தலிலும் அதிமுகவுடன் இணைந்தே போட்டியிடுவோம் என தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தமிழக சட்டமன்ற குழு பா.ஜ.க தலைவரும், நெல்லை சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் வருகை தந்தார் அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து இவ்வாறு பேசியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…