Politics : திரிபுராவின் புதிய முதல் மந்திரியாக மாணிக் சாகா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவின் முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ் சற்றுமுன்னர் திரிபுரா ஆளுநரிடம் தனது பதவி விலகல் கடிதத்தை வழங்கியுள்ளார். அந்த கடிதத்தை ஆளுநர் ஏற்று கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரிபுராவில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 36 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் 16 இடங்களை மட்டுமே பெற்றது தோற்றது.
திரிபுராவின் முதலமைச்சர் பிப்லப் குமார் பதவி விலகியது சர்சைக்குரிய முடிவு எனவும் என பிப்லப் குமார் மீது MLAக்கள் அதிருப்தி எனவும் தகவல் வெளியானது.
பிப்லப் குமார் தேவ் ராஜினா செய்துள்ள நிலையில் திரிபுராவின் புதிய முதல் மந்திரியாக மாணிக் சாகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜக எம்.எல்.ஏக்கள், தங்களின் சட்டமன்ற குழு தலைவராக மாணிக் சாகா தேர்வு செய்தனர். புதிய முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாணிக் சாகாவிற்கு முன்னாள் முதல் மந்திரி பிப்லப் குமார் தேப்வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திரிபுராவில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…