இந்திய குடிமக்களின் அடையாளமாக ஆதார் அட்டை விளங்குகிறது. கண்ணின் விழித்திரை, கைரேகை போன்றவற்றுடன் சேர்த்து பெயர், முகவரி, பிற சுய குறிப்புகள் உள்ளிட்டவற்றை பதிவு செய்த பின்னர் 12 இலக்க தனித்துவமான எண்களைக் கொண்ட ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. இது இந்திய மக்களின் வாழ்நாள் அடையாளமாகும். பான் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், வாக்காளர் அடையாள அட்டைப் போல அரசு சார்ந்த பல திட்டங்களின் நன்மைகளைப் பெறவும் ஆதார் அட்டை பயன்படுகிறது.
ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஆதார் அட்டை அடையாளமாக உள்ளது போல, தமிழ்நாட்டு மக்களுக்கு என தனி அடையாள அட்டையை வழங்க மாநில அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆதார் எண்ணைப் போலவே தமிழ்நாட்டில் “மக்கள் ஐடி” என்ற ஒன்றை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது. அதற்காக The State Family Database என்ற மாநில குடும்ப தரவுதளம் உருவாக்கப்பட்டு அதன் மூலமாக மக்கள் ஐடி விநியோகிக்கப்படும் எனக்கூறப்படுகிறது.
சமூக நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க, 10 முதல் 12 இலக்க எண்களைக் கொண்ட ‘மக்கள் ஐடி’ பயன்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே அரசின் திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக மக்களுக்கு என பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…