பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஸ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பீகார் முதல்வர் நிதிஸ்குமாருக்கும் பாஜகவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்தது. இந்நிலையில், பாஜக சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் பிரதமர் மோடி தலைமையிலான நிகழ்ச்சிகளை நிதிஸ்குமார் புறக்கணித்தார். இதற்கு பாஜகவின் கடுமையான விமர்சனத்தை வைத்தனர்.
இதனையடுத்து, பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இனி ஐக்கிய ஜனதா தளம் இடம்பெறாது எனவும் தெரிவித்தார். மேலும், இன்று மாலை 4 மணிக்கு முதல்வர் நிதிஸ்குமார் தன் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
மேலும், தேசிய ஜன நாயகக் கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா எம்.பிக்கள் வெளியேறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நீண்ட காலமாக பீகார் அரசியலில் பாஜக - ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மோதல் போக்கு இருந்த நிலையில் இன்று முதல்வர் நிதிஸ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…