தமிழகத்தில் அரசியல் என்றாலே ஊழல் செய்வது தான் எனும் மனநிலையில் பலர் இருப்பது சரியானது தானோ என நினைக்கும் வகையில், அரசியலில் யாரும் புனிதர் அல்ல என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சியமைந்து ஒரு வருடம் நிறைவு பெற்றுவிட்ட நிலையில், திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பொன்மலைப்பட்டியில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "ஒரு ஆண்டில் நான் 100 கோடி ரூபாய் சம்பாதித்ததாக, எதிர்கட்சியினர் குற்றம் சுமந்துகின்றனர். நான் அப்படி சம்பாதிக்கவில்லை, அப்படி சம்பாதித்தால், அது நிச்சயம் மக்களுக்காக தான் செலவழிக்கப்படும். முதலில் உங்கள் கட்சி பிரச்னையை தீர்த்து விட்டு, பிறகு எங்களிடம் வந்து பேசுங்கள்.
முடிந்தால் எங்கள் மீது வழக்குப் போட்டு, எங்களை உள்ளே தள்ளுங்கள். என் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 19 வழக்கு போட்டு வைத்துள்ளனர். அதை எல்லாம் தாண்டி தான் அமைச்சராகி உள்ளேன். இந்த நேரு புனிதர் அல்ல என்று திருவெறும்பூரில் நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் பேசி உள்ளனர்.
புனிதராக இருந்தால், வாயில் வெண்ணெய் தடவி படுக்கப் போட்டு இருப்பார்கள். புனிதராக இருக்க நாங்கள் என்ன சங்கர மடமா நடத்துகிறோம். அரசியலில் யார் தான் புனிதர் இருக்கிறார்கள்? சென்னைக்கு அடுத்த நிலைக்கு திருச்சியை உயர்த்துவோம். நாங்கள், நிச்சயம் நேர்மையாக மட்டுமே பணியாற்றுவோம், எந்த தவறும் செய்ய மாட்டோம்." என பேசினார்.
அரசியலில் யாரும் புனிதர் இல்லை என அவர் கூறிய கருத்து அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் திமுககாரர்களுடன் மட்டுமே பழகி வருவதால், அவருக்கு இப்படிப்பட்ட எண்ணம் இருக்கலாம் என எதிர்க்கட்சியினர் கேலி செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…