Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மனநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. எம்எல்ஏ ஜவாஹிருல்லா சாடல்!

Baskar Updated:
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மனநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. எம்எல்ஏ ஜவாஹிருல்லா சாடல்!Representative Image.

மதுரை: ஹிஜாபை கொண்டு வந்ததால் கர்நாடகாவில் விரட்டியடிக்கப்பட்ட பாஜகவின் நிலை பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் இந்தியாவிலும் அதே நிலை தொடரும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

மதுரை அவனியாபுரம் புறவழிச் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹிருல்லா எம்எல்ஏ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 'மத்திய சிவில் சட்ட வாரியம் சமீபத்தில் பொதுமக்களிடம் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்துவது குறித்து மக்களுடைய கருத்துக்களை கேட்டிருக்கிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடி பேசும்போது நாட்டில் இரு வேறு சட்டங்கள் இருக்க முடியாது ஒரே சட்டம் தான் இருக்க வேண்டும் என்ற கருத்தை கூறியிருக்கிறார்.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு சட்ட ஆணையத்தை அமைத்த அந்த  சட்ட ஆணையம் தனது அறிக்கையை அழித்து உள்ளது. அதில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்ததற்கான சாத்திய கூறுகள் என அறிக்கை தந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரக் கூடிய சூழ்நிலையில் ஒட்டுமொத்தமாக ஒன்பது ஆண்டுகள் பாஜக ஆட்சியில் எல்லா வகையிலும் தோல்வி அடைந்த நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற நோக்கத்தோடு மோடி சிறுபான்மை சமூகத்தை வைத்து சிறு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆயத்தங்களை செய்து வருகிறார்.

பாஜகவின் கூட்டணி கட்சியான மிசோராமின் முதலமைச்சர் சட்டத்தை ஏற்கவில்லை. மேலும் மணிப்பூரிலும் இந்த சட்டத்தை ஏற்கவில்லை. ஜார்க்கண்ட் மாநிலங்களில் உள்ள பழங்குடியின மக்களும் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுவரை முஸ்லிம்கள் மட்டும் தான் தனி சட்ட வாரியம் அமைத்துள்ளனர். ஆனால் தற்போது சீக்கிய மதத்தினர் தனி சட்ட வாரியம் அமைத்திருக்கிறார்கள்.பொது சிவில் சட்டத்தை இஸ்லாமியர்கள் மட்டும் எதிர்க்கவில்லை. பாஜக கூட்டணியில் உள்ள அங்கம் உள்ள கட்சியினரும்  எதிர்க்கின்றனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மனநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. எம்எல்ஏ ஜவாஹிருல்லா சாடல்!Representative Image

அயோத்திலே ராமர் கோவிலை கட்டி விட்டோம்' 370 பிரிவை நீக்கி விட்டோம் அதேபோல சிவில் சட்டத்தை கொண்டு வந்து 2024 தேர்தலிலே வெற்றி பெறுவோம் என மோடி நினைக்கிறார். அவருடைய கனவு பகல் கனவாகும். மோடி அரசாங்கத்தினுடைய இந்த பன்முக தன்மை குறித்து பண்பாட்டை சிதைக்க கூடிய நடவடிக்கைக்கு எதிராக மக்கள் செயல்படுவார்கள். கர்நாடகாவில் ஹிஜாபை கொண்டு வந்து ஆட்சியை இழந்த பாஜக போல் நிலைமை இந்தியா முழுவதும் வரும்.

பொது சிவில் சட்டம் பற்றி இஸ்லாமிய சமூக மக்கள் கவலைப்பட தேவையில்லை. இந்தியர்களுக்கும் அவர்களுடைய தனிப்பட்ட பண்பாடு நடைமுறை கலாச்சாரம் ஆகியவற்றிக்கு எதிரானது ஒட்டுமொத்தமாக அனைவரும் எதிர்த்து மாற்றியமைப்பார்கள். தமிழ்நாடு ஆளுநர் ஆர் எம் ரவி இனி அந்தர் பல்டி ரவி என்று தான் அழைக்க வேண்டும். பல சந்தர்ப்பங்களில் ஒரு கருத்தை சொல்லிவிட்டு அந்த கருத்துக்கு தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பு வந்த பின் அவர் அதை மாற்றி அமைத்திருக்கக்கூடிய நிலைமை நாம் பார்த்துள்ளோம்.

அவர் மனநோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒரு அமைச்சருக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி நடத்துவது மட்டும் தான் ஆளுநர் கடமை ஆளுநர் முதலமைச்சர் யாரை நியமிக்கிறாரோ பரிந்துரை செய்கிறாரோ அவருக்கு பதவியேற்பு செய்து ஆளுநர் வேலை. அவர் அமைச்சரை முதலமைச்சர் பரிந்துரையை அதை அங்கீகரிப்பது தான் அவர்களுடைய வேலை.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மனநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. எம்எல்ஏ ஜவாஹிருல்லா சாடல்!Representative Image

சர்வாதிகாரத்தின் உச்சகட்டமாக ஒரு அமைச்சரை நீக்கம் செய்வதாக தெரிவித்துள்ளது. சட்டவல்லுனர்களை கலந்து கொள்ளாமல் முடிவு எடுத்து   இருக்கிறார்கள் என்பதும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. முதலமைச்சர் உள்துறை அமைசருக்கு எழுதிய கடிதத்திலேயே இது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று மிக தெளிவாக சட்ட ஆலோசனையும்,  பெறாமல் தான் தோன்றித்தனமாக சர்வாதிகார மையமாக செயல்படுகிறார் என்பது தெரிகிறது.

ஆளுநர் ரவியை மாளிகையில் இருந்து தொடராமல் ஒன்றிய அரசு திரும்பப்பெறும் வரை தொடர்ச்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தோழமைக் கட்சிகளோடு இணைந்து தொடர் போராட்டம் நடத்த வேண்டும்.  முதலமைச்சர் இதை உடனடியாக அறிவிக்க வேண்டும். பொது சிவில் சட்டத்தை திராவிட முன்னேற்ற கழகம் காங்கிரஸ் மறுமலர்ச்சி திராவிட கழகம் இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எதிர்கின்றது.

பாஜகவிற்கு அடிமை மனப்பான்மையோடு இருக்கிறவர்கள் மட்டுமே அவர்களுடன் இணைந்து செயல்படுகிறார்கள். அரசியலில் ஓபிஎஸ் ஆண்டியாக தான் செயல்படுகிறார். ஓபிஎஸ் இன் அறிவின்மை  வெளிப்படையாக தெரிகிறது. நிச்சயமாக எதிர்க்கட்சிகள் ஒன்று சேரக்கூடிய அந்த நிகழ்வு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்தியா முழுவதும் தொடரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்