நான் முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததை நிரூபிக்கவில்லை என்றால் இபிஎஸ் அரசியலை விட்டு விலக தயாரா என ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய ஓபிஎஸ், நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை குறித்து என்னை பற்றி ஏதாவது விமர்சனம் வந்தால் கேளுங்கள் பதில் சொல்கிறேன் என்றும், இபிஎஸ் நடத்திய போராட்டம் எனக்கு எதிரானதாக தான் கருதவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், தான் முதல்வர் ஸ்டாலினுடன் 1 மணி நேரம் பேசியதாக இபிஎஸ் கூறுகிறார், முதலமைச்சரை நான் சந்தித்ததை இபிஎஸ் நிரூபித்தால், நான் அரசியலை விட்டு விலக தயார். நிரூபிக்கவில்லை என்றால் இபிஎஸ் விலக தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…