அதிமுக தலைமை அலுவலகம் 10 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பிரபல அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் கடந்த 11ஆம் தேதி நடைபெற்றது. அப்போது அதிமுக அலுவலகத்தை ஓபிஎஸ் கைப்பற்றியதாக புகாரளிக்கப்பட்டது. இதனால் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலால் அதிமுக அலுவலகத்திற்கு காவல்துறையினர் சீல் வைத்தனர்.
இந்நிலையில், அதிமுக அலுவலகத்தில் வைத்த சீலை அகற்ற வேண்டும் என ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரந்தனர். இந்த வழக்கு கடந்த சில நாட்களாக விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனையடுத்து, நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி அதிமுக அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்க உத்தரவிடப்பட்டது. மேலும் ஒரு மாதத்திற்கு தொண்டர்களை அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது எனவும் அதிமுக அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் 10 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மயிலாபூர் கோட்டாட்சியர் சீலை அகற்றி சாவியை ஈபிஎஸ் தரப்பிடம் ஒப்படைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…