அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக கூறப்படும் எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், ஜெயலலிதா நினைவு இடத்திற்கு சென்ற அவர் மரியாதை செலுத்தினார். பின்னர் அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதலில் காயமடைந்தவர்கள் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களையும் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார் .
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக தலைமை அலுவலகத்தில் சமூக விரோதிகள் அத்துமீறி நுழைந்தது குறித்து காவல்துறையில் புகார் அளித்தோம்; எனினும், பாதுகாப்பு வழங்கப்படவில்லை, அதிமுக தலைமை அலுவலத்தில் ரவுடிகளை அழைத்து வந்து, கட்சிக்காரர்களை ஓ.பி.எஸ். தாக்கிய சம்பவம் வேதனை அளிக்கிறது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இவரையெல்லாம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் ஆக்கியதற்கு தக்க வெகுமதியை தந்திருக்கிறார் என்றும், பொதுக்குழுவில் அவருக்கு மேடையில் நாற்காலி போடப்பட்டது; ஆனால், அவர் வரவில்லை, ஓ.பி.எஸ். ஒரு சுயநலவாதி என்பதை மீண்டும் காட்டியுள்ளார் என காட்டமாக தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…