Politic News : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பாஜகவில் இணைய போவதாக எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து பாஜக பிரமுகர் சிடி ரவி பேட்டியளித்துள்ளார்.
தமிழகத்தில் பிரபல அதிமுக கட்சியில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் இடையே ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில், அதிமுகவுக்கு ஓ பன்னீர்செல்வம் துரோகம் செய்து விட்டு பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளதாக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் பேட்டி அளித்துள்ளனர்.
மேலும், இது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சிடி ரவி, “இது அனுமானத்தின் அடிப்படையில் எழுப்பப்படும் கேள்வி என்றும் பன்னீர்செல்வம் அவர்கள் முதலில் இது பற்றி பேசினால் தான் என்னால் பதில் சொல்ல முடியும்” என தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…