தமிழகத்தில் பிரபல அதிமுக கட்சியில் தற்போது ஒற்றை தலைமை என்ற சர்ச்சை நடைபெற்று வரும் நிலையில், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சமீபத்தில் அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது ஓபிஎஸ் மகன்களும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கழகத்தின் கொள்கை கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாகவும் கழகத்தின் சட்டதிட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறையை குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சிலர் நீக்கி வைக்கப்படுகிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீக்கி வைக்கப்பட்டவர்கள் பட்டியலில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மற்றும் ஜெயபிரதீப் ஆகிய இருவரும் உள்ளனர்.
மேலும், கோவை செல்வராஜ், மருது அழகுராஜ், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, சைதை பாபு, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட சிலர் இந்த பட்டியலில் உள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…