கிருஷ்ணகிரி: பாஜக மூத்த தலைவர் அமித்ஷா சொன்னது போல் தமிழரை பிரதமாக்குவோம் என்ற வாய்மொழிக்கு ஏற்ப அடுத்த பிரதமராக வருவதற்கு தமிழகத்திலிருந்து தகுதியானவர் எடப்பாடி பழனிச்சாமி தான் என அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு நேற்று வந்த பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா ’தமிழகம் இரண்டு பிரதமர்களை தவற விட்டுவிட்டது என்றும், காமராஜர் மற்றும் மூப்பனார் ஆகிய இருவரும் பிரதமராக இருக்க வேண்டியவர்கள் என்றும் தெரிவித்தார்.
வருங்காலத்தில் தமிழகத்திலிருந்து ஒருவர் பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்று கூறினார். இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழகத்திலிருந்து பிரதமர் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டால் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும், தமிழிசை சௌந்தரராஜன் அல்லது எல். முருகனை பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யலாம் என்றும் பரிந்துரை செய்தார்.
இந்நிலையில் அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டிலிருந்து பிரதமராக வருவதற்கு தகுதியானவர் எடப்பாடி பழனிச்சாமி மட்டும் தான். உலக அரசியல் மட்டுமல்லாமல், இந்திய அரசியலையும் தெரிந்தவர் மற்றும் விரல் நுனியில் புள்ளி விவரங்களை வைத்திருப்பவர் அவர் தான் என்றும் தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…