உலக பகுதிகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நிலநடுக்கம். துருக்கி - சிரியாவைத் தொடர்ந்து தஜிகிஸ்தான் நாட்டிலும் 6.8 ரிக்டர் அளவுகோல் பதிவாகியுள்ளது.
பிப்ரவரி மாதத்தில் நடந்த கொடூர சம்பவங்களில் துருக்கி - சிரியா நாட்டில் நடந்த நிலநடுக்கம் தான். அதனால் நாட்டின் பல பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்தன. பலி எண்ணிக்கை 50,000-ஐ தாண்டியுள்ளது. இன்னும் அந்த சோகத்தில் இருந்தே மீளவில்லை ஆனால் உலகத்தில் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நேற்று காலை உத்தரகாண்ட் மாநிலத்தில் 4.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் எல்லை பகுதியான பித்தோராகர் பகுதியில் இருந்து கிழக்கு திசையில்143 கி.மீ. தொலைவில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வுக்கான தேசியமையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் உணரப்பட்டதால் மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியே வந்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இப்படி இருக்கையில் இன்று தஜிகிஸ்தான் நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காலை 6 மணிக்கு ஏற்பட்டுள்ளது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உஸ்பெகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தானில் ஆகிய பகுதிகளில் உணரப்பட்டதாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…