Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நடிகர்கள் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம்; புதுச்சேரி ஆளுநர் தமிழிசை பரபரப்பு கருத்து! 

kanimozhi Updated:
நடிகர்கள் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம்; புதுச்சேரி ஆளுநர் தமிழிசை பரபரப்பு கருத்து! Representative Image.

திரைப்பட நடிகர்களை கொண்டாடுங்கள் பாலாபிஷேகம் செய்யுங்கள் ஆனால் பாரதி போன்றவர்களை மறந்துவிட்டு அதை செய்யாதீர்கள் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்  தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் தனியார் நாளிதழ் சார்பில் மகாகவி பாரதியாரின் 141 வது பிறந்த நாளை முன்னிட்டு மகாகவி பாரதியார் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்துகொண்டு பாரதியார் விருதை எழுத்தாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் வேங்கடாசலபதிக்கு வழங்கினார்.

 
இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசும் போது தமிழகத்தில் தமிழ் தமிழ் என்று சொல்லி வந்தவர்கள் பாரதியை மறந்து விட்டு தான் தமிழை பேசினார்கள். பாரதிய மறந்துவிட்டு தமிழை பேச முடியாது புதுச்சேரியில் பாரதிக்கு வானுஉயர சிலை கடற்கரையில் அமைக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

மேலும் அவர் கூறுகையில் இன்றைய இளைஞர்கள் மாணவர்கள் பாரதியை படியுங்கள் சுதந்திரப் போராட்டத் தியாகிகளை படியுங்கள் அவர்கள் இல்லை என்றால் இந்த பாரதத்தில் நாம் நிற்க முடியாது நடிகர்களை கொண்டாடுங்கள், கட்அவுட் வையுங்கள், பாலாபிஷேகம் செய்யுங்கள் ஆனால் பாரதியை மறந்து விட்டு அதை செய்யாதீர்கள் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள் எனத் தெரிவித்தார். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்