ADMKpoliticalCrisis:- அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு ஓபிஎஸ் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் பொதுச்செயலாளரை தேர்ந்தேடுக்கும் விதிகளில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழுவில் பொன்னையன் வாசித்த 16 தீர்மானங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்ட்டுள்ளது. அந்த 16 தீர்மானங்களில் முக்கியமான தீர்மானங்கள், அதிமுக செயற்குழுவில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம். அதிமுகவில் புதிதாக துணைப் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம். அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதி ரத்து . அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் ரத்து போன்றவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு ஓபிஎஸ் போட்டியிடுவதை தடுக்கும் வகையில், பொதுச்செயலாளர் பதிவிக்கு போட்டியிடுவர்கள் 10 ஆண்டுகள் தொண்டர்களாக இருந்தல் வேண்டும், 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிந்தால் மட்டுமே பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும் என்ற புதிய நிபந்தனை உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த 4 மாதங்களுக்குள் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்துவது என்றும், தேர்தல் நடத்தும் பொறுப்பாளர்களாக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் நியமனம் செய்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…