Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தொண்டரை அடிக்கப்பாய்ந்த வைத்தியலிங்கம்...வாயை பொத்திக்கொண்ட தொண்டர்..!

madhankumar July 10, 2022 & 19:12 [IST]
தொண்டரை அடிக்கப்பாய்ந்த வைத்தியலிங்கம்...வாயை பொத்திக்கொண்ட தொண்டர்..!Representative Image.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பானது நாழி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை நடைபெற இருக்கும் பொது குழு குறித்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் தொடர்களிடையே தனித்தனியாக ஆலோசனை நடத்திவருகின்றனர்.

ஒபிஎஸ் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் முன்னாள் எம்.பி. வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன். ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனை முடிந்து வெளியே வந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்பொழுது வைத்தியலிங்கம் பேசுகையில், ''நீதிமன்ற தீர்ப்பு 9 மணிக்கு. நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிப்போம். அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து எங்கள் நடவடிக்கை இருக்கும். 

அதிமுகவிற்கு ஓபிஎஸ்தான் ஒருங்கிணைப்பாளர். இப்பொழுதும் அவர்தான் ஒருங்கிணைப்பாளர், எதிர்காலத்திலும் அவர்தான் ஒருங்கிணைப்பாளர்'' என்றார். அப்பொழுது அவரது அருகில் நின்றுகொண்டிருந்த தொண்டர் ஒருவர் 'சோழ மண்டல தளபதி அய்யா ஆர்.வி' என உறுத்த குரலில் கோஷமிட, கோபமடைந்த  வைத்தியலிங்கம் 'யோவ்...' என அடிக்க பாய்ந்தார். 

அந்த தொண்டர் பயத்தில் வாயை கையால் பொத்திக்கொண்டார். தொடர்ந்து பேசிய வைத்தியலிங்கம்  ''அதாவது ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்டது இந்த இயக்கம். இந்த 2,600 பேரால் எதுவும் செய்ய முடியாது'' என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்