தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் 30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில் தமிழகத்தின் எல்லையோரம் ஆந்திராவில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 10 ஆம் தேதிவரை தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மலை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரமும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.5 கோடி ரூபாய் சம்பள வேலையை ராஜினாமா செய்த ஊழியர்…! அதுக்கு ரீசன் என்ன தெரியுமா..? கேட்டா டென்ஷன் ஆயிடுவீங்க…
கன்னியாகுமரி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், நீலகிரி, கோவை மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மன்னர் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மேற்கு திசையில் இருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும்,மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கிரிப்டோவில் இன்வெஸ்ட் பண்ணனுமா? இந்திய பணக்காரர்களும் இப்படி தான் ஃபாலோப் பண்றாங்க.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…