காமராஜர் 120வது பிறந்த நாளை ஒட்டி காமராஜர் நினைவிடத்தை சீரமைக்க தமிழக அரசுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்குவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவிடம் சிதைந்து காணப்படுகிறது. இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள தலைவர்களின் நினைவிடத்தை போல காமராஜர் நினைவிடத்தை சீர்படுத்தி ஒளி ஒலி கண்காட்சி அமைக்க வேண்டும் என தமிழக முதலமைச்சரிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பான பராமரிப்பு பணிக்காக தமிழக பாஜக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டி முதலமைச்சரிடம் கொடுக்க தயாராக இருக்கிறோம் என கூறியுள்ளார். மேலும் தமிழக அரசு சீரமைக்க தயாராக இல்லை என்றால் அதை சீரமைக்கவும் பராமரிக்கவும் தமிழக அரசு அனுமதி தந்தால் நாங்கள் அதை முக்கிய சுற்றுலா தளமாக மாற்றுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…