சேலத்தில் மத்திய பாஜக அரசின் 8 ஆண்டு ஆட்சிக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சியின்போது காங்கிரஸ் தொண்டர்கள் தங்களுக்குள் வாய்ச் சண்டையில் ஈடுபட்டதை மக்கள் வேடிக்கையாக கண்டுகளித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தமிழகம் முழுவதும் பாஜக, மோடி அரசின் 8 ஆண்டு சாதனை விளக்கக் பொதுக்கூட்டம் நடத்தி வருகிறது. அண்ணாமலை தலைமையில் நடக்கும் இந்த பொதுக்கூட்டங்களில், வழக்கமாக திராவிட கட்சிகளின் மாநாடுகளில் இருப்பதைப் போல் மக்கள் கூட்டம் திரண்டு வருவது திமுகவுக்கு கிலியை ஏற்படுத்தியதோ இல்லையோ, நாங்களும் தான் தேசியக் கட்சிக் எனச் சொல்லிக்கொள்ளும் தமிழகத்தில் தேய்ந்து போன காங்கிரஸ், பாஜகவுக்கு எதிராக போட்டி பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகரத்தில், இளைஞர் காங்கிரசார் மத்திய பாஜக அரசின் 8 ஆண்டு சாதனைகள் அல்ல வேதனைகள் எனும் தலைப்பில் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாஸ்கரன் இதற்கான துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்க வந்திருந்தார்.
மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வருவதால், இதர மாநகர் மாவட்ட நிர்வாகிகளும் வந்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். அப்போது மாவட்டத்தின் மூத்த நிர்வாகிகளை முந்திக்கொண்டு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் துண்டு பிரசுரம் வழங்கியதால், மூத்த நிர்வாகிகளுக்கும் இளைஞர் காங்கிரஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கொஞ்சம் கூட ஒற்றுமை இல்லாமல் பொதுமக்கள் முன்னிலையிலேயே கட்சியினர் மோதிக் கொண்டதால் கடுப்பான மாவட்ட தலைவர் பாஸ்கரன் நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
இதைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், கட்சி அலுவலகத்தில் கோஷ்டி மோதல் நடந்த காலம் போய் பொதுமக்கள் முன்னிலையிலேயே அடித்து கொள்ளும் அளவிற்கு முன்னேறி விட்டார்களே என வேடிக்கையாக உச் கொட்டி கடந்து சென்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…