வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்தால் எப்படி இருக்கும். இது ஒரு மெகா கூட்டணியாக இருக்குமல்லவா. இதைத் தான் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிடுகிறார் என பிரபல அரசியல் பார்வையாளர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
நாளிதல்கள், அரசியல் செய்தி இதழ்களில் பெரும் அனுபவம் கொண்ட மூத்த பத்திரிக்கையாளர்கள் தற்போது யூடியூப் சேனல்களின் பக்கம் ஒதுங்கிவிட்டார்கள். அங்கு அவர்கள் பரபர அரசியல் நிலவரங்களைப் புட்டு புட்டு வைக்கிறார்கள். தங்களுக்கே உரிய பாணியில் தமிழக அரசியல், இந்திய அரசியலை பிரித்து மேய்கிறார்கள். அந்த வகையில் தற்போது எடப்பாடியின் கணக்கு குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் பிரபல அரசியல் விமர்சகரான மூத்த ஊடகவியலாளர் மணி.
எடப்பாடியின் ஆசை அதிமுக தலைமையில் கூட்டணி, அதில் காங்கிரஸ், மநீம, விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் இருக்கவேண்டும் என்பதுதான் எனக் கூறியுள்ளார் மணி. மேலும் இதனை பாஜக நிச்சயமாக நடக்கவிடாது. பாஜகவைக் கழற்றி விட்டால்தான் விசிக உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் அதிமுக உடன் வருவதற்கு குறைந்த பட்ச வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதிமுக இல்லாமல் தமிழகத்தில் பாஜக ஒன்றும் இல்லை என்பது பாஜகவுக்கு தெரியும் எனும் பொருள்படும்படி பேசியுள்ளார் பத்திரிகையாளர் மணி.
இன்னொரு பக்கம் திமுக நிச்சயம் காங்கிரஸை விடாது. அது வெளியேறிச் செல்ல திமுக இடம்தராமல் பார்த்துக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…