தமிழகத்தில் பிரபல அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமை குறித்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்த நிலையில் ஜூலை 11ல் நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.
இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தொடர்ந்து இருப்பார் என்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், சசிகலா, டிடிவி தினகரன் அதிமுகவில் இணைந்து பணியாற்ற வேண்டும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்கள் நிலைபாடு. யார் வேண்டுமானாலும் இணையலாம் என்பது சசிகலா, டிடிவி தினகரனையும் சேர்த்துதான் கூறுகிறோம். நாங்கள் அங்கு இணையலாம். அவர்கள் இங்கு இணையலாம் என்பது அல்ல” என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…