Politic News : கரூர் பாராளுமன்ற தொகுதி பொதுமக்களிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
சீமான் காட்டம்
நேற்று தூத்துக்குடி சென்ற நாம் தமிழர் கட்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ராஜீவ் காந்தி பாலியல் குற்றவாளி என விமர்சித்தார். இதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக கரூரில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, “ராஜிவ் காந்தியை முன்னாள் பிரதமர் என்று பாராமல் சீமான் பேசியதற்கு பதில் தெரிவித்திருந்தேன்.
ஜோதிமணி பதிலடி
விஜயலக்ஷ்மி ஆதாரத்தோடு சீமான் மீது புகாரளித்ததை நான் தெரிவித்தேன். ஆனால் தனிப்பட்ட முறையில் என்னை தாக்கும் நோக்கத்தில் சீமான் பேசுகிறார். மேலும், அவர் நேர்மையானவராக இருந்தால் நீதிமன்றத்தை நாடி மானநஷ்ட வழக்கு தொடரலாம்.
பெண்கள் மீது ஆபாசமாக தாக்கினால் என்னை அரசியலை விட்டு விரட்டலாம் என சீமான் நினைக்கிறார். இந்த மாதிரியான தாக்குதல்கள் பாரதிய ஜனதா கட்சியிலும் எனக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் சீமான் தான் பாஜகவின் B டீம் என கடுமையாக விமர்சித்தார்.
சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்
கரூர் நாடாளுமன்ற தொகுதி மக்கள் மானங்கெட்டு ஜோதிமணிக்கு வாக்களித்ததாக சீமான் பேசியுள்ளார். இதற்க்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இதனையடுத்து, நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள், சீமான் போன்ற ஆபாச வக்கிர அரசியல்வாதிகளை பின்பற்றி தவறான பாதைக்கு செல்லக்கூடாது. மேலும் சீமானை தோலுரிக்கும் பணியை தொடர்ந்து செய்வோம்” என காட்டமாக கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…