சென்னை: ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது மனைவி மேகலா நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்தனர். பின்பு செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதியளித்து, வழக்கை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…