Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

செந்தில்பாலாஜி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு..! ஆட்கொணர்வு மனு தலைமை நீதிபதிக்கு அனுப்பிவைப்பு..!!

Saraswathi Updated:
செந்தில்பாலாஜி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு..! ஆட்கொணர்வு மனு தலைமை நீதிபதிக்கு அனுப்பிவைப்பு..!!Representative Image.

அமைச்சர் செந்திபாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது சட்டவிரோதம் என்றும், இந்த மனு விசாரணைக்கு ஏற்றதல்ல என்றும் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.  

தமிழகத்தில் மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, கடந்த மாதம் 14ம் தேதி சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ரத்தநாளங்களில் அடைப்பு இருப்பதை உறுதிசெய்தனர். இதையடுத்து, உயர்நீதிமன்ற அனுமதியோடு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு, பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மருத்துவக் கண்காணிப்பில் இருந்துவருகிறது. 

இதனிடையே, செந்தில்பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்றக் காவல் வரும் 12ம் தேதி நீட்டிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது நீதிமன்றக் காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். 

இந்நிலையில், அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை சட்டவிரோதமாக கைது செய்திருப்பதாகக் கூறி, அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த 27ம் தேதி நீதிபதிகள் நிஷாபானு, பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனைவி தொடர்ந்த இந்த ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் நிஷாபானு, பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று வழங்கியது. அதில், அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என நீதிபதி நிஷாபானு தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும், செந்தில்பாலாஜியை நீதிமன்றக் காவலில் இருந்து விடுவிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார். அதேநேரத்தில், இந்த ஆட்கொணர்வு மனு  விசாரணைக்கு ஏற்றதல்ல என மற்றொரு நீதிபதியான பரதசக்ரவர்த்தி தீர்ப்பு அளித்துள்ளார்.  

இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில்,  இந்த ஆட்கொணர்வு மனுவானது, 3வது நீதிபதியின் விசாரணைக்காக தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்