தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை (பிஎஃப்ஐ) காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று விமர்சித்ததோடு, வெறுப்பை வளர்க்கும் மற்றும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எந்தவொரு அமைப்பும் தேச விரோதமானது என்று கூறினார்.
வெறுப்பைப் பரப்புபவர் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முக்கியமல்ல, வெறுப்பையும் வன்முறையையும் பரப்புவது தேச விரோதச் செயல், அப்படிப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை எதிர்த்துப் போராடுவோம் என்று ராகுல் காந்தி கூறினார்.
தற்போது கர்நாடகா தும்கூரில் நடைபெற்று வரும் பாரத் ஜோடோ யாத்திரையின் போது பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
பிஎஃப்ஐ அமைப்பு மீது தடை விதிக்கப்பட்ட நிலையில், அந்த அமைப்பு குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவிப்பது இதுவே முதல் முறையாகும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…