புதுச்சேரியில் உள்ள தியாக சுவரில் வீர சாவர்க்கர் பெயர் பொறித்த கல்லை பதித்தததை எதிர்க்கட்சிகள் சர்ச்சையாக்கை வரும் நிலையில், இது குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த தமிழிசை சவுந்திரராஜன், "வீர சாவர்க்கரின் பெயர் பொறித்த கல்லை புதுச்சேரியில் உள்ள தியாக சுவரில் பதித்ததில் எந்த தவறும் இல்லை. இதை யாரும் அரசியல் ஆக்க கூடாது. அப்படியே அரசியலாக்கினாலும் கூட அதை எதிர்கொள்ள தயார்.
நாட்டிற்காக போராடியவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம். தேசத்தை பற்றி தெரியாதவர்கள் தான் வீர சாவர்க்கரை எதிர்க்கிறார்கள்.
நாட்டிற்காக போராடிய அவர் 10 ஆண்டுகள் தனிமை சிறையில் இருந்துள்ளார். சுதந்திரத்திற்காக ஒரு நாள் போராடினால் கூட அவர்களை நாம் கொண்டாட வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…