Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சாவார்க்கரை எதிர்ப்பவர்கள் தேசத்தை அறியாதவர்கள்.. தமிழிசை பொளேர்!!

Sekar August 04, 2022 & 16:49 [IST]
சாவார்க்கரை எதிர்ப்பவர்கள் தேசத்தை அறியாதவர்கள்.. தமிழிசை பொளேர்!!Representative Image.

புதுச்சேரியில் உள்ள தியாக சுவரில் வீர சாவர்க்கர் பெயர் பொறித்த கல்லை பதித்தததை எதிர்க்கட்சிகள் சர்ச்சையாக்கை வரும் நிலையில், இது குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த தமிழிசை சவுந்திரராஜன், "வீர சாவர்க்கரின் பெயர் பொறித்த கல்லை புதுச்சேரியில் உள்ள தியாக சுவரில் பதித்ததில் எந்த தவறும் இல்லை. இதை யாரும் அரசியல் ஆக்க கூடாது. அப்படியே அரசியலாக்கினாலும் கூட அதை எதிர்கொள்ள தயார்.

நாட்டிற்காக போராடியவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம். தேசத்தை பற்றி தெரியாதவர்கள் தான் வீர சாவர்க்கரை எதிர்க்கிறார்கள். 

நாட்டிற்காக போராடிய அவர் 10 ஆண்டுகள் தனிமை சிறையில் இருந்துள்ளார். சுதந்திரத்திற்காக ஒரு நாள் போராடினால் கூட அவர்களை நாம் கொண்டாட வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்