சென்னை: மதுபானத்தை டெட்ரா பாக்கெட்டில் கொண்டு வந்தால் கலப்படம் தவிர்க்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் மதுபான கடைகளில் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களில் மதுவிற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் போலி மதுபானங்கள் அதிகரித்து உள்ளதால், போலி மதுபானம் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தவிர்க்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் காகிதக் குடுவையில் (டெட்ரா பாக்கெட்) மதுபானம் வழங்க அரசு ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில், மதுபானத்தை டெட்ரா பேக்கில் கொண்டு வந்தால் கலப்படம் தவிர்க்கப்படும் என்று அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.
மதுபானங்களை டெட்ரா பேக்கில் கொண்டு வருவது குறித்து பேசி வருகிறோம். மதுபானத்தை டெட்ரா பேக்கில் கொண்டு வந்தால் கலப்படம் தவிர்க்கப்படும் , டெட்ரா பேக்கை கையாளுவது சுலபம், மறுசுழற்சி செய்வதால் விவசாயிகளுக்கு நன்மை உள்ளது. டெட்ரா பேக் குறித்து அதிகாரிகள் குழு வழங்கும் அறிக்கை அடிப்படையில் அமல்படுத்தப்படும். 90 மில்லி காகிதக் குடுவையில் மதுபானம் வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்" என்று கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…