தமிழக அமைச்சர் வாகனத்தில் பாஜகவினர் செருப்பு வீசியது அரசியல் நாகரிகமற்ற செயல் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இது குறித்து அவர், “தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை குறிவைத்து காலணி வீசியுள்ள பாஜகவினரின் அநாகரிகச்செயல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
மேலும், வட மாநிலங்களில் காலங்காலமாக கடைபிடித்துவரும் வன்முறை அரசியல் வெறியாட்டத்தை தமிழ்நாட்டிலும் மெல்ல மெல்ல நுழைக்க முயலுகின்றனர். நேர்மையாக இயங்க வேண்டும் என நினைப்பவர் பிடிஆர், இது ஒரு கொடுமையான செயல்,வன்மையாக கண்டிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…