தூத்துக்குடி: மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வீரன் அழகுமுத்துக்கோன் 313 பிறந்தநாள் விழாவில் பங்கேற்க வந்தவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் போலீசார் லேசான தடியடி அடித்து களைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங் குளத்தில் சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோன் 313வது பிறந்த நாள் விழா முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வாகனங்களில் வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
மதுரை திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கட்டாலங்குளம் நுழைவு வாயில் மீது சிலர் ஏறி சமுதாய கொடியை ஏற்றி உள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவர்களை கீழே இறக்கி விட்டனர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100 க்கும் மேற்பட்டோர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
மறியலில் ஈடுபட வேண்டாம் என காவலர்கள் ஒலிபெருக்கி மூலம் கலைந்து போக சொன்னார் கலைந்து செல்லாததால் போலீசார் லேசான தடியடி அனைத்து கலைத்தனர். இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டு கோயில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…