Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

NEET தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும்..! - பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

Chandrasekaran Updated:
NEET தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும்..! - பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்Representative Image.

NEET என்ற தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய அளவிலான தேர்வாகவும், முதுகலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் NEET எனும் தேசிய மருத்துவ தகுதி தேர்வினை கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இந்த தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு ஏற்கனவே மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், NEET தேர்வை அறிமுகப்படுவது கிராமப்புற மற்றும் சமூகரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும், மாநில அரசின் கீழ் இயங்கும் மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும்.

NEET தேர்வு முறையினை மத்திய அரசு கைவிட வேண்டும். தற்போதுள்ள முறையே தொடர வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்