Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

'ஆளுநரை மாற்றாவிட்டால் தீக்குளிப்பேன்' - மதுரை திமுக நிர்வாகியின் மிரட்டல் போஸ்டர்..!

Saraswathi Updated:
'ஆளுநரை மாற்றாவிட்டால் தீக்குளிப்பேன்' -  மதுரை திமுக நிர்வாகியின் மிரட்டல் போஸ்டர்..!Representative Image.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை வரும் 27ம் தேதிக்குள் மாற்றாவிட்டால்,  28ம் தேதி சிம்மக்கல்லில் உள்ள கருணாநிதி சிலை முன்பு தீக்குளிக்கப் போவதாக திமுக நிர்வாகி ஒருவர், மதுரை மாநகர் முழுவதும் போஸ்ட்டர் ஓட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல் அவருக்கும், திமுக அரசுக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக,   அமைச்சர் செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்க ஆளுநர் ரவி ஒப்புதல் கொடுக்க மறுத்துவிட்டார். ஆனால், தமிழக அரசு சிறப்பு ஆணை பிறப்பித்து இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதாக அறிவித்தது. 

ஆளுநரிடம் மட்டுமில்லாது, மத்திய அரசுக்கும், திமுக அரசுக்கும் இடையேயும் முரண்பாடு இருந்துவருகிறது.  இதை கண்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், சமீபத்தில் சமூக வலைதளத்தில் காணொலி ஒன்று வெளியிட்டு, திமுகவையோ, திமுககாரனையோ சீண்டிப் பார்த்தால் தாங்க மாட்டீர்கள். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை என்று கூறியிருந்தா.  மு.க.ஸ்டாலினின் இந்த வீடியோ,  திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, மத்திய அரசாலும், தமிழக ஆளுநராலும் திமுக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் நெருக்கடிகள் உருவாக்கப்படுவது குறித்து திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் மத்திய அரசு மீதான அதிருப்திகளை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். 

அந்த வகையில், மதுரையில் ஒய்வு பெற்ற ஆவின் பணியார்கள் நலச்சங்க தலைவரும், ஆவின் திமுக தொழிற்சங்க கவுரவ தலைவருமான(எல்பிஎஃப்) மானகிரி கணேசன் என்பவர், தமிழக ஆளுநரை வரும் 27ம் தேதிக்குள் மாற்றாவிட்டால், மறுநாள் (28ம் தேதி) மதுரை சிம்மக்கல்லில் உள்ள கருணாநிதி சிலை முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக நகர் முழுவதும் போஸ்ட்ர் ஓட்டி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

அந்த போஸ்டரில், "தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக இரவு, பகல் பராமல் அயராது பாடுபட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டுவர அரும்பாடுபட்டு வருகிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு இடையூறாக செயல்பட்டு வருகிறார். ஆகவே, ஒன்றிய அரசே உடனடியாக தமிழகத்தில் இருந்து வரும் 27ம் தேதிக்குள் ஆளுநரை மாற்ற வேண்டும். மாற்றாவிட்டால் மறுநாள் (28ம் தேதி )மதுரை சிம்மக்கல்லில் உள்ள கருணாநிதி சிலை முன் தீக்குளிப்பேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மதுரையில் திமுக நிர்வாகியின் இந்த தற்கொலை மிரட்டல் எச்சரிக்கை போஸ்டர் மதுரை அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்