மாணவி பிரியா மரணத்தில் தமிழக அரசு வெளிப்படை தன்மையுடன் நடந்து கொண்டுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 8 இடங்களில் உள்ள துணை சுகாதார நிலையங்களில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மாணவி பிரியா மரணத்தில் தமிழக அரசு வெளிப்படை தன்மையுடன் நடந்து கொண்டுள்ளது அதன்படி தான் இதில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அதனால்தான் இந்த ஒழுங்கு நடவடிக்கைக்கு அனைத்து மருத்துவர்களும் உறுதுணையாக இருந்துள்ளனர். ஆனால் இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். அவர் ஆட்சியில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்பதை அவர் தெரிவிக்க வேண்டும், மேலும் தற்பொழுது அவர் மருத்துவர் களுக்கு ஆதரவாக பேசுகிறாரா, மருத்துவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தவறு என்கிறாரா அல்லது யார் மீது அவர் நடவடிக்கை எடுக்க சொல்கிறார் , யார் மீது குற்றம் சாட்டுகிறார் என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும் என அடுக்கடுக்காய் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…