Politic News : எய்ம்ஸ் செங்கலை திமுக MLA உதயநிதி ஸ்டாலின் திருடி விட்டார் என பாஜகவினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலின் பரப்புரையின் போது உதயநிதி ஸ்டாலின், ஒரு செங்கலை கையில் வைத்துக்கொண்டு இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என பிரச்சாரம் செய்தார்.
இந்நிலையில், இவரது இந்த பிரச்சாரம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டது.
இதனையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக நடப்பட்டிருந்த செங்கலை உதயநிதி ஸ்டாலின் திருடி விட்டார். மேலும் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளனர்.
இதுகுறித்து கூறிய பாஜகவினர் “உதயநிதி செய்த இந்தச் செயல் மத்திய அரசின் திட்டத்தை இழிவுபடுத்துவது போல் அமைந்துள்ளது என்றும் அரசு கட்டிடம் கட்டுவதற்காக நடப்பட்டிருந்த செங்கலை திருடுவது சட்டப்படி குற்றம்” என தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…