AIADMK R. B. Udhaya Kumar : சமீபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக அலுவலக கதவை எட்டி உதைத்த நபர் உயிரிழந்தது குறித்து ஆர்.பி.உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் பிரபல அதிமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களால் இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற அன்று ஓபிஎஸ் ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்தை உடைத்து உள்ளே சென்றார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அப்பகுதியில் கலவரம் வராமல் இருக்க அதிமுக கட்சி அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
இதனையடுத்து, பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற அன்று அதிமுக தலைமை அலுவலக கதவை எட்டி உதைத்த நபர் நேற்று அரியலூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வத்திற்கு கேள்வி எழுப்பிய ஆர்.பி.உதயக்குமார் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “இப்படியான இழி செயலில் நீங்கள் ஈடுபடுவீர்கள் என்று கட்சியில் யாருமே எதிர்பார்க்கவில்லை. அதிமுக என்ன உங்கள் அப்பன் வீட்டு சொத்தா? புரட்சி தலைவர் எம்ஜிஆர், அம்மாவின் ஆன்மா உயிரோடு இருப்பதற்கான சாட்சிதான் நேற்று அரியலூரில் நடந்த அந்த விபத்து” என கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…