Politic News : திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில்சட்டமன்ற உறுப்பினராகவும் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் உதயநிதி அமைச்சர் பதவி, துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என திமுகவினர் தொடர்ந்து குறல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் நடைபெறும் அணைத்து தி.மு.க நிகழ்ச்சிகளிலும் உதயநிதி படத்துடன் இளைஞரணியினர் பேனர்களை வைத்து வருகின்றனர். அப்படி வைக்கும் பேனர்களில் “மூன்றாவது கலைஞர்” என்ற பட்டப்பெயரை வைத்து வருகின்றனர்.
இதனையடுத்து, இதனை பார்த்த உதயநிதி ஸ்டாலின், தன்னை “மூன்றாவது கலைஞர்”, “இளம் தலைவர்” போன்ற பெயர்களில் அழைக்க வேண்டாம் எனவும் பலரும் என்னை சின்னவர் என்று அழைக்கிறார்கள். உங்களை எல்லாம் விட நான் சின்னவன் என்பதால், அப்படியே அழையுங்கள்.” என கூறியுள்ளார்.
இந்நிலையில், சின்னவர் என்ற பெயரும் சர்ச்சைகளைக் கிளப்பியது. இது தொடர்பாக காஞ்சிபுரத்தில் நடந்த கட்சி நிகழ்வில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “பலருக்கும் சின்னவர் என்று சொன்னால் வயிற்றெரிச்சல் வருகிறது. அதனால் என்னை சின்னவன் என்றே அழையுங்கள்” எனக் கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…