Perarivalan release : ஜெயலலிதாவின் தொலைநோக்கு சிந்தனையால் பேரறிவாளனின் விடுதலை கிடைத்தது. இது ஜெயலலிதாவின் சிந்தனைக்கு கிடைத்த வெற்றி என ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
பேரறிவாளன் விடுதலை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து பேரறிவாளன் இன்று விடுதலை செய்யப்பட்டார். இது குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோர் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஓபிஎஸ் இபிஎஸ் அறிக்கை
அந்த அறிக்கையில், ”பேரறிவாளன் விடுதலை ஜெயலலிதாவின் தொலைநோக்கு சிந்தனை கிடைத்த வெற்றி என்றும் அதிமுக அரசின் முயற்சிகளினால் பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது என்றும் எஞ்சிய ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…