என்னதான் உணவு, மருந்து, மாத்திரை என்று சாப்பிட்டாலும் கருவின் வளர்ச்சிக்கு கடவுளின் ஆசியும் அவசியம் தானே. அந்த வகையில், ஒரு கர்ப்பிணி பெண் தனது பத்து மாதம் வரை எந்த தெய்வங்களை வணங்க வேண்டும் என்று பார்க்கலாம்.
முதல் மாதம்:
முதல் மாதத்தில் கரு உருவாகும் காலம் என்பதால், இதற்கு காரக கிரகம் சுக்கிரன், ஸ்ரீலட்சுமி, ஸ்ரீபுவனேஸ்வரி, இந்திராணி போன்ற தெய்வங்களை வணங்குவது சிறப்பு.
இரண்டாவது மாதம்:
இந்த மாதத்தில் கரு சற்று மென்மை தன்மையை பெற்றிருக்கும். செவ்வாய் அதிபதி. க்ஷேத்ர பாலகர்கள், ஸ்ரீமுருகன் போன்ற தெய்வங்களை வணங்க வேண்டும்.
மூன்றாவது மாதம்:
மூன்றாவது மாதத்தில் கருவில் வளரும் குழந்தைக்கு கை, கால்கள் உருவாகியிருக்கும். எனவே குரு அதிபதி. பிரம்மா, இந்திரன், ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.
நான்காவது மாதம்:
இந்த மாதத்தில் குழந்தைக்கு எலும்பு மற்றும் நரம்பு உருவாகத் தொடங்கும். எனவே, சூரியன் அதிபதி. சிவ பெருமானை வணங்கினால், கரு வளர்ச்சி நன்றாக இருக்கும்.
ஐந்தாவது மாதம்:
ஐந்தாவது மாதத்தில் குழந்தையின் உடலமைப்பு வளரத் தொடங்கும். அப்போ சந்திரன் அதிபதி. ஸ்ரீதுர்கை மற்றும் ஸ்ரீகௌரி அம்பாளை வணங்கலாம்.
ஆறாவது மாதம்:
ஆறாவது மாதத்தில் குழந்தையின் ரோமம், நகம் உருவாக தொடங்கும். சனி அதிபதி. ஸ்ரீபைரவர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீவிநாயகரை வழிபாடு செய்ய வேண்டும்.
ஏழாவது மாதம்:
இந்த மாதத்தில் குழந்தையின் பிராணன் உருவாகும். புதன் அதிபதி. எனவே, ஸ்ரீவிஷ்ணு பகவானை வணங்க வேண்டும்.
எட்டாவது மாதம்:
எட்டாவது மாதத்தில் கருவின் உடல் வளர்ச்சி அதிகரிக்கும். எனவே, ஸ்ரீவிநாயகரை வழிபாடு செய்யலாம்.
ஒன்பதாவது மாதம்:
இந்த மாதத்தின் போது கரு முழுவதுமாக வளர்ச்சி அடைந்திருக்கும். சந்திரனே அதிபதி. துர்கை மற்றும் ஸ்ரீகௌரி அம்மனை வணங்க வேண்டும்.
பத்தாவது மாதம்:
பத்தாவது மாதத்தில் குழந்தை பிறந்துவிடும் என்பதால், குழந்தை ஆத்ம பலம் பெறும். எனவே, இதற்கு ஆத்மகாரகனான சூரியன் அதிபதி. சிவ பெருமானை வணங்க வேண்டும்.
குறிப்பு: இவை அனைத்தும் ஒரு நம்பிக்கைக்காக மட்டுமே.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…