பச்சிளம் குழந்தை முதல் 5 வரை உள்ள குழந்தைகளுக்கு வயிற்று வலி ஏற்படும்போதெல்லாம் எல்லா அம்மாக்களுக்கும் நினைவு வருவது கிரைப் வாட்டர் தான். உண்மையைச் சொல்ல போனால், அதிக நேரம் அழுதுக்கொண்டே இருக்கும் குழந்தைகளுக்கு ஒரு வீட்டு வைத்தியமும் கூட. இது வயிற்றில் இருக்கும் பூச்சிகளை நீக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இப்படி, அம்மாக்களின் உடனடி வீட்டு வைத்தியமாக இருக்கும் கிரைப் வாட்டர் பற்றி எய்ம்ஸ் மருத்துவர் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
அதாவது, சமீபத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் அருண் பாபு திருநாவுக்கரசு வெளியிட்ட பதிவில், 'இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் இந்த கிரைப் வாட்டர் கொடுக்கும் பழக்கம் மட்டும் மாறவேயில்லை. ஆனால், உடலளவில் இந்த கிரைப் வாட்டரால் குழந்தைகளுக்கு எந்த பலனையும் அளிக்காது. அதற்கு பதிலாக, உடலுக்கு கடுமையான தீங்கு தான் விளைவிக்கும்.
தொடர்ந்து இந்த கிரைப் வாட்டரை கொடுத்துவந்தால் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக, இந்த கிரைப் வாட்டரில் கலக்கப்படும் ப்ரோனோபோல் (Bronopol) என்ற மூலக்கூறு அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது. மிக எளிமையாக சொல்லவேண்டுமென்றால், கிரைப் வாட்டர் கொடுப்பது உங்கள் குழந்தைகளுக்கு நீங்களே விஷத்தை கொடுப்பதற்கு சமம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், இந்த ப்ரோனோபோல் குழந்தைகளுக்கு எடை இழப்பு, புற்றுநோய், ஏன் முத்திய நிலையில் மரணத்தை கூட உண்டாக்கும் எனவும் கூறியுள்ளார். அதேபோல், இதில் பயன்படுத்தப்படும் மற்ற மெத்தில் பராபென் மற்றும் நா பென்சோயேட் ஆகியவையும் நச்சுத்தன்மை வாய்ந்தவை தான். மேலும், இந்த பல நாடுகளில் இந்த மருந்தை தடை செய்யப்பட்டுள்ளன.
ஆனால், இந்தியாவில் மட்டும் தான் 'என் பாட்டி என் அம்மாவுக்கு கொடுத்தார், என் அம்மா எனக்குக் கொடுத்தார்' என்ற விளம்பரம் செய்து விற்பனை செய்கிறார்கள். எனவே, இவ்வளவு ஆபத்து நிறைந்த கிரைப் வாட்டரை இனிமேலாவது தவிர்த்து விடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். நம் குழந்தைகளின் நலன் நம் கையில் தான் இருக்கிறது. எனவே, இனியாவது, மருத்துவர்களை கூறியதை கேட்டு எச்சரிக்கையாக இருங்கள் பெற்றோர்களே.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…