இயற்கையாகப் பயன்படுத்தும் அனைத்து க்ரீம்களில் இந்த ரோஜா இதழ்கள் பயன்படுத்துவார்கள். அந்த ரோஜா இதழ்கள் பயன்படுத்தி தனியாக பவுடர் செய்தால் எப்படி இருக்கும். ரோஜா இதழ்களில் பல வகையான சத்துகள் உள்ளது.
✤இந்த ரோஜா இதழ்களைச் சருமத்திற்குப் பயன்படுத்தும் போது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சருமத்தில் பிரச்சனைகள் இருந்தால் இது எளிதில் சரிசெய்து தரும். இந்த பதிவில் ரோஜா இதழ்கள் பயன்படுத்தினால் முகம் மற்றும் உடல் அழகாக மாறுமா என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
✤ எலுமிச்சை பழம் – 1
✤ வெள்ளை வினிகர் -2 ஸ்பூன்
✤ ரோஜா பூ இதழ்கள் – 1கப்
✤ புதினா இலைகள் – 1கப்
✤ முதலில் ஓரு எலுமிச்சை பழத்தை எடுத்து அதை இரண்டாக வெட்டி அதில் உள்ள விதைகளை எடுத்து விட்டு நன்றாகப் பிழியவும்.
✤ அதில் வரும் சாற்றை இரண்டு ஸ்பூன் அளவிற்கு எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். ரோஜா இதழ்கள் மற்றும் புதினா இலைகள் இரண்டையும் வெயிலில் காய வைத்து அரைக்க வேண்டும்.
✤ அரைத்த பிறகு, அதை ரோஜா இதழ்கள் ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். அதில் புதினா இலைகளை அரைத்து ஒரு கப் அளவிற்கு அதில் சேர்க்கவும்.
✤ அதில் பிழிந்து வைத்த எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் கலக்கினால் முகம் மற்றும் உடலுக்குப் பயன்படுத்த பேஸ்ட் தயார்.
✤ எலுமிச்சை சாறு சிலருக்குச் சேராமல் உடலில் அரிப்புகள் மற்றும் அலர்ஜிகள் வரும். அப்படி வந்தால் எலுமிச்சை சாற்றுக்குப் பதிலாக வெள்ளை வினிகர் கூட சேர்த்துப் பயன்படுத்தலாம்.
✤ இதை உடல் மற்றும் முகம் முழுவதுமாக அப்ளை செய்து ஒரு அரை மணி நேரம் உலர விடவும். அதற்குப் பின், தண்ணீரில் குளிக்கலாம். இதை வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை செய்யலாம். பெண்கள் பயன்படுத்தும் போது இதனுடன் மஞ்சள் சேர்த்துக் குளிக்கலாம்.
✤ எலுமிச்சை பழம் என்பது ஒரு நோய் எதிர்ப்புத் தன்மை கொண்டது. இதை முகம் மற்றும் உடலில் பயன்படுத்தும் போது சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் கொப்பளங்கள் மற்றும் பருக்கள் என அனைத்தையும் குணப்படுத்தும்.
✤ முகம் மற்றும் உடலில் அதிகமான எண்ணெய்ப் பசை இருந்தால் இது சுத்தப்படுத்தி மிருதுவாக மாற்றித் தரும்.
✤ ரோஜா இதழ்கள் பல இயற்கையாகத் தயாரிக்கும் க்ரிம்களில் இது கண்டிப்பாக இருக்கும் அதற்குக் காரணம். இது சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை நீக்கி அழகாகவும் மற்றும் மிருதுவாகவும் மாற்றித் தரும்.
✤ இது சருமத்தில் உள்ள ஈரப்பதம் குறையாமல் மற்றும் வறட்சியான சருமம் ஆக இருந்தால் இது ஈரப்பதம் ஆக மாற்றித் தரும்.
✤ ரோஜா இதழ்கள் உடலில் மற்றும் முகத்தில் பயன்படுத்தினால் அழகாகவும் மற்றும் மிருதுவாகவும், பொலிவுடனும் வைத்துக் கொள்ளும்.
✤ இந்த ரோஜா இதழைச் சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு மற்றும் சீத பேதி போன்ற பிரச்சனைகளைச் சரி செய்யும். உடலுக்குக் குளிர்ச்சி தன்மை அதிகரிக்கும். இது சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
✤ புதினா இலைகள் என்பது மூலிகை தன்மை கொண்டது. இது சருமத்தில் உள்ள நிறமிகளை மேம்படுத்துவதற்கும் உதவியாக இருக்கும்.
✤ இது முகத்திற்கு ஒரு இயற்கையாகவே டோனராக பயன்படுத்தலாம்.
✤ இது முகம் மற்றும் சருமத்தின் துளைகளில் உள்ள அழுக்குகள் நீக்கி முகத்தை அழகாக மாற்றும்.
✤ இது சருமத்தில் உள்ள நீரேற்றம் அதிகமாக உள்ள சருமம் ஆக மாற்றும். இது வறட்சியாக இருக்கும் சருமத்தை ஈரப்பதம் உள்ள சருமம் ஆக மாற்றும்.
✤ இதை அரைத்து தண்ணீர் கலந்து ஒரு பாட்டிலில் அடைத்து வைத்து முகத்திற்கு ஒரு டோனர் போல் பயன்படுத்தலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…